சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படம் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் தந்து கொண்டிருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே தன்னுடைய தந்தை என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஆரம்பித்தார் பாலகிருஷ்ணா.
அப்படத்தை தேஜா இயக்க பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமானது. ஆனால், படம் ஆரம்பித்த சில நாட்களுக்குள் இயக்குனர் தேஜாவுக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், தேஜா படத்திலிருந்து விலகினார். பின்னர் படத்தை பாலகிருஷ்ணாவே இயக்குவதாக தகவல் வெளியானது.
இருப்பினும் 'மகாநதி' படம் வெளிவந்த பின் பாலகிருஷ்ணா அவருடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. 'மகாநதி' படம் போன்று தரமான ஒரு படமாக என்டிஆர் படம் உருவாக வேண்டுமென்றால் அந்தப் படத்தை தான் இயக்குவதை விட சிறந்த ஒரு இயக்குனர் இயக்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.
பாலகிருஷ்ணாவின் 100வது படமான 'கௌதமிபுத்ர சட்டகர்ணி' படத்தை இயக்கிய கிரிஷ்-ஐ அழைத்து 'என்டிஆர்' படத்தை இயக்கித் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் கோரிக்கையைத் தட்ட முடியாத கிரிஷ் படத்தை இயக்க சம்மதித்திருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாலகிருஷ்ணா நேற்று வெளியிட்டார்.
“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கச் சொன்ன பாலகிருஷ்ணாவுக்கு நன்றி. இது ஒரு சாதாரண படமல்ல, தெலுங்கு மக்களின் பெருமையைப் பற்றிச் சொல்லும் படம். எனது மனப்பூர்வமான உழைப்பை இந்தப் படத்தில் கொடுப்பேன்,” என இயக்குனர் கிரிஷ் தெரிவித்துள்ளார்.