ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம், தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. தற்போது 'காமுகி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பார்வை சவால் கொண்ட கதாநாயகனுக்கும் அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் இளமங்கைக்குமான காதல் தான் இந்த காமுகி படம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக 'இதிகாசா' என்கிற படத்தை இயக்கிய பினு என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லையாம். அதுபோல இதில் நடிப்பதற்கு சில ஹீரோக்களும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப்போனார்களாம்.
இதுகுறித்து கூறியுள்ள அபர்ணா பாலமுரளி, “மலையாள சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகள் என்றால் பாரபட்சம் காட்டுவது இப்போதும் கூட தொடர்கிறது.. மிகுந்த வலி, போராட்டங்களுடன் தான் இந்தப்படத்தை முடித்தோம்” என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.