சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்துள்ள புதிய படம் பாரத் அனே நேனு. இந்த படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் நா பேரு சூர்யா. இந்த படத்தையும் ஏப்ரல் 26-ந்தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், மகேஷ்பாபு படத்தை ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அல்லு அர்ஜூன் படத்தை ஒரு வாரத்திற்கு பிறகோ வெளியிடுமாறு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என்ற இரண்டு நடிகர்களின் படங்களுமே ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதாக இல்லையாம். வேண்டுமானால் அவர்கள் படத்தை வேறு தேதியில் வெளியிட சொல்லுங்கள் என்று இரண்டு படக்குழுவினருமே விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்களாம்.
இருப்பினும், ஏதேனும் ஒரு படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் முயற்சியை தொடர்ந்து வருகிறார்கள்.