நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
கடந்த சில நாட்களாக இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக இருப்பது மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலும் அதில் புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ப்ரியா வாரியரும் தான். எந்தளவுக்கு இந்தப்பாடலுக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவுக்கு இந்தப்பாடல் குறித்த சர்ச்சைகளும் கிளம்பின.
இருந்தாலும் இந்தபாடலுக்கு கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படையில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். ஆனால் முதல்வரின் இந்த செயலுக்கு மலையாள நடிகரும் இயக்குனருமான ஜாய் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் படக்குழுவினரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நீங்கள், சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏன்..? ஒருவேளை குற்றவாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவு தருகிறீர்களோ” என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய் தாமஸ்.