அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
மோகன்லாலின் மகன் பிரணவிற்கு நாளை மிக முக்கியமான நாள். ஆம்.. அவர் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஆதி' என்கிற படம் நாளை (ஜன-26) வெளியாகிறது. 'த்ரிஷ்யம்', 'பாபநாசம்' படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால், இந்தப்படம் நிச்சயமாக பிரணவிற்கு திரையுலகில் வெற்றிப்பாதை அமைத்துக் கொடுக்கும் என்றே பலரும் ஆருடம் சொல்கிறார்கள்.
இந்தநிலையில் பிரணவின் நண்பரும், நடிகருமான துல்கர் சல்மான் பிரணவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “டியர் அப்பு.. நீ எப்போதுமே எனக்கு ஒரு தம்பி போலத்தான்.. உன்னுடன் குழந்தை பருவத்தில் பழகிய நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே தங்கி இருக்கின்றன. உன் வெற்றியை உன் பெற்றோரும் சகோதரியும் எப்படி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். ஆனால் அவர்களுக்கு அந்த கவலை தேவையில்லை.. ஏனென்றால் பிறக்கும்போதே சூப்பர் ஸ்டார் ஆவதற்காக பிறந்தவன் நீ” என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் துல்கர் சல்மான்.