குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கைதி எண் 150 படத்தை அடுத்து தற்போது சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாக்களில் நடித்த சில மூத்த நகைச்சுவை நடிகர்களுக்கு தனது சார்பில் பண உதவி செய்துள்ளார் சிரஞ்சீவி. அதாவது, சீனியர் தெலுங்கு நகைச்சுவை நடிகர்களான குண்டு ஹனுமந்தராவ், போட்டி வீரா ஆகியோர் வறுமையில் வாடுவதை ஒரு டிவி பேட்டியில் அறிந்திருக்கிறார் சிரஞ்சீவி. அதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் அவர்களின் விலாசத்தை கேட்டு அறிந்து கொண்டு அவர்களுக்கு தனது சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கியிருக்கிறார்.