சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். நேற்று சாலோ ரே சாலோ ரே சால் -என்ற பெயரில் தனது பிரச்சார யாத்திரையை அவர் தொடங்கினார்.
அப்போது ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் என்ற இளைஞரின் பெற்றோரை அழைத்து பேசினர் பவன் கல்யாண். அதோடு அந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.
மக்கள் விரோத செயல்களை ஜனசேனா பார்ட்டி பொறுத்துக் கொள்ளாது. மக்களை சூழ்ந்து கொண்டுள்ள பிரச்னைகளை விடுவிடுக்க, நல்லது செய்ய, சேவை செய்ய அரசியலில் இறங்கியிருக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வருகிறேன். விபத்துக்கள், குற்றங்கள், காட்டுமிராண்டி தனங்களை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பேசினார்.
பவன்கல்யாணின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பவன் கல்யாணின் இந்த அரசியல் யாத்திரை பயணம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.