சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை சுத்தமான, ஆரோக்யமான பூமியாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்களில் ஆதரவினை நாடினார் பிரதமர் மோடி. அதையடுத்து அக்டோபர் 2-ந்தேதி இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறயிருக்கும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கலந்து கொள்ள சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி.
ஹிந்தி சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய நடிகர்கள் பலருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். மலையாளத்தில் மம்மூட்டியைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு, பிரபாசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இவர்களில் பிரபாஸ், தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெற தனக்கு வாய்ப்பளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கடிதம் எழுதியிருப்பவர், தூய்மை இந்தியா திட்டத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறாராம். அதோடு, தூய்மை இந்தியா திட்டம் சம்பந்தமாக தனது ரசிகர் மன்றங்களையும் களமிறக்குகிறாராம் பிரபாஸ்.