சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த வருடம் தெருநாய்களை கொல்வதில் தவறில்லை என மோகன்லால் சொன்னதை வைத்து அவரை பிராணிகளுக்கு எதிரானவரோ என தவறாக மதிப்பிட வேண்டாம். அது அந்த தெருநாய்களால் மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளக்கு பாதிப்பு ஏற்பட்டபோது அதை பொறுக்க முடியாமல் அவர் சொன்ன கருத்தே தவிர, மிருகவதையை ஒருபோதும் அவர் விரும்பியது இல்லை. மோகன்லால் எந்த அளவுக்கு இயற்கையை விரும்புகிறாரோ அந்த அளவுக்கு மிருகங்கள் மீதும் பிரியம் காட்டுபவர் தான்..
அந்தவகையில் நாய்கள் வளர்ப்பதில் பிரியரான மோகன்லால், தற்போது தனது வீட்டிற்கு புதிய வரவாக ராட்வெல்லரர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.. இதற்கு ஸ்பைக் என பெயரும் வைத்துள்ளார். ஏற்கனவே மோகன்லாலிடம் உள்ள சைபீரியன் ஹஸ்கி இனத்தை சேர்ந்த 'ஸ்டார்ம்' என்கிற நாய், நிறைய 'டாக் ஷோ'க்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.