சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் பக்கமும் திருப்பினார். இந்தநிலையில் திலீப்பின் வலதுகரம் என சொல்லக்கூடிய அளவுக்கு அவரது நண்பராக விளங்கும் இயக்குனர் நாதிர்ஷா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பல்சர் சுனில்.
நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்பின் பெயர் அடிபட ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை, அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருபவர் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா தான். அதனால் தான் போலீஸாரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. இதனால் தானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நாதிர்ஷா தனது முன் ஜாமீனுக்காகவும் விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தனக்கு 25 ஆயிரம் ரூபாயை நாதிர்ஷா மூலமாக திலீப் தந்ததாக தற்போது கூறியுள்ளார் பல்சர் சுனில்.
இந்த தொகையை நாதிர்ஷா இயக்கிவந்த 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ஷூட்டிங் தொடுபுழாவில் நடைபெற்று வந்தபோது அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் நாதிர்ஷாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தகவலை உறுதி செய்யும் விதமாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குறிப்பிட்ட தேதியில் தொடுபுழாவில் இருந்ததை அவரது மொபைல் டவர் காட்டியதாம். அந்த டவர் காட்டிய பகுதியில் அதே தேதியில் நாதிர்ஷா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனராம்.