சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.
ஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.