அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு |
நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் பல்சர் சுனில். இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின் இவருக்கு உதவி செய்துள்ளார் சிறைக்காவல் பணியில் இருந்த போலீஸ்காரரான அனீஸ் என்பவர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பென்ட் செய்துள்ளனர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்சர் சுனில் திலீப்பின் நண்பரான நாதிர்ஷாவை தொடர்பு கொண்டு டீலிங் பேசியதற்கும், திலீப்பிடம் போனில் பேச முயற்சி செய்ததற்கும், திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள முக்கியமான நபர்களுடன் பேசுவதற்கும், சுனில் இருந்த காக்கநாடு சிறை வளாகத்தில் காவல் பணியில் இருந்த இந்த போலீஸ் அதிகாரி அனீஸ் உதவியாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.