100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பைரவா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழை விட தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நானியுடன் அவர் நடித்த நேனு லோக்கல் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதையில் உருவாகும் மகாநதி படத்தில் லீடு ரோலில் நடித்து முடித்து விட்டார்.
அதையடுத்து, தற்போது திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத அவரது 25-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்து பாங்காங்கில் நடைபெறுகிறது. அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலை ஏற்கனவே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சில தினங்களிலேயே அந்த பாடலை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளார்களாம்.
மேலும், இதே படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் சில பாடல்களுக்காக வேறு சில வெளிநாடுகளுக்கும் பவன்கல்யாண் டீமுடன் செல்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.