சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் சந்திக்கவில்லை. இந்தநிலையில் சில தினகளுக்கு முன் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் திலீப்பின் மகள் மீனாட்சியும் அவரை சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்..
அதை தொடர்ந்து நடிகர் ஜெயராம் சிறையிலிருக்கும் திலீப்பை சந்தித்து ஓணம் வாழ்த்துக்களை கூறிவிட்டு பரிசளித்துவிட்டும் வந்துள்ளார். தடையை ஒருவர் உடைத்துவிட்டால், மற்றவர்களுக்கு அந்த பாதையில் செல்வது எளிது தானே. அந்தவகையில் மலையாள திரையுலக பிரபலங்களான இயக்குனர் ரஞ்சித்,, நடிகர்கள் ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சாஜன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர்.