சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள நடிகர் திலீப் சிறையில் இருப்பதால் அவரைப்பற்றிய செய்திகள் வெளிவருவது பெருமளவில் குறைந்துவிட்டது.. அதிலும் குறிப்பாக அவரது மகள் மீனாட்சி என்ன ஆனார் எங்கே இருக்கிறார் என்கிற தகவலும் வெகு ரகசியமாகவே இருக்கிறது.. திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததுமே தனது தந்தை திலீப்புக்கு ஆதரவாக அவருடனேயே இருந்து விட்டார் மீனாட்சி. பின்னர் அவரே திலீப், காவ்யா மாதவன் மறுமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தார்.
சமீபத்தில் தனக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் திலீப் அளித்த மனுவில் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் தன் மீது திட்டமிட்டே களங்கம் கற்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டார் என திலீப் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மீடியாவிலும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் தான் மஞ்சு வாரியர் திலீப்பின் வீட்டிற்கு சென்று தனது மகள் மீனாட்சியை சந்தித்தார் என்கிற தகவல் கசிந்துள்ளது..
அப்படி வீட்டிற்கு வந்த மஞ்சுவை பார்க்க தான் தயாராக இல்லை என முதலில் மீனாட்சி சொன்னார் என்றும், ஆனால் மஞ்சுவை நேசத்துடன் காவ்யா மாதவன் வரவேற்று மகளுடன் பேச வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. திலீப் தற்போது சிறை சென்ற விஷயத்தில் தனது பங்கு எதுவும் இல்லையென்றும் அப்படி வரும் செய்திகளால் தன்னை தவறாக நினைக்கவேண்டாம் என மகளிடம் மஞ்சு வாரியர் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் மஞ்சுவின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலோ இந்த செய்தி உண்மையில்லை என்றும், மஞ்சு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 'ஆமி' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதாகவும் மறுத்துள்ளார்களாம்.