சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். 100 படங்களை தாண்டி இப்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 102-வது படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தை அடுத்த நந்தியால் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிக்கு பாலகிருஷ்ணா அங்கு சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதில் கோபமான அவர், அந்த ரசிகரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைராகி வருகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பில் தனது உதவியாளரை ஷூவை கழற்ற சொல்லி அடித்தது, அதற்கும் முன்னர் ஒரு நிகழ்ச்சியில் ரசிகரை அறைந்தது என பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது.
நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ.,வாகவும் இருப்பதால் பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.