சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாளத்தில் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் பிரபல முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் முக்கியமானர் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பல்சர் சுனில். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கிய வழக்கில் பல்சர் சுனிலை நேற்று திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பல்சர் சுனில் அங்கு நின்று கொண்டிருந்த நிருபர்களை நோக்கி "கடத்தல் வழக்கில் மேடத்திற்கும் தொடர்பு உண்டு என்று நான் கூறியது பொய்யல்ல. போலீஸ் விசாரணையில் அது தெரியும். அப்படி போலீசார் கண்டுபிடிக்காவிட்டால் நானே அவர் பெயரை அடுத்த முறை கோர்ட்டுக்கு வரும்போது சொல்வேன். அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதை மட்டும் இப்போது சொல்கிறேன்" என்று சத்தமாக கூறியபடியே சென்றான்.