சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து விட்டு வெளியேறினார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ராணாவும் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமான விசாரணை குறித்து ராணாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். முக்கியமாக, அவருக்கும் அதில் தொடர்பு இருப்பதைப்போன்று கேள்வி கேட்க தொகுப்பாளினியிடம் தனது கோபத்தை கைகளை நீட்டியபடி வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா. அதையடுத்து அது சம்பந்தமான கேள்விகளை நிறுத்திக்கொண்டார்களாம்.
ஆனபோதும், பின்னர் அந்த பேட்டியை சேனலில் ஒளிபரப்பியபோது, ராணாவிடம் போதை பொருள் சம்பந்தமாக தொகுப்பாளினி கேள்வி கேட்பதையும், அதற்கு ராணா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதையும் அப்படியே காண்பித்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ராணா, இந்த வீடியோ போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ராணாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட தொகுப்பாளினியை ராணாவின் ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.