100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஜெகபதிபாபு குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழில் வெளியான சேரன் பாண்டியன், கிழக்கு வாசல், பூவே உனக்காக, ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், பட்ஜெட் பத்மநாபன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கிறார். அதோடு, விஜய்யின் பைரவா, விஷாலின் கத்திச்சண்ட உள்பட பல நேரடி தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும், கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துவரும் ஜெகபதிபாபு, பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு தெலுங்குப்பட இயக்குனர் அணுகியபோது அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் ஜெகதிபாபு. அதோடு, இனிமேல் ஹீரோ மற்றும் வெயிட்டான வில்லன் வேடங்களில் நடிப்பதை குறைத்து விட்டு அழுத்தமான பர்பாமென்ஸ் வேடங்களில் நடிப்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜெகபதிபாபு.