சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த 2௦13ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி, பாவனா நடித்திருந்த இந்த படத்தை சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி இதன் இரண்டாம் பாகத்தையும் 'ஹனி பீ-2' என்கிற பெயரில் எடுக்க வைத்து, அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது. இந்த நிலையில் இயக்குனர் ஜூனியர் லாலை ஒரு இளம் டிவி நடிகை பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது.. இதுகுறித்து, நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் லால்
“இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு சற்று புதிய நபர்கள் தேவை என்பதால் கதாநாயகிக்கு துணையாக வரும் சில இளம் நடிகைகளை போட்டோக்கள் மூலம் செலக்ட் செய்தோம். இப்போது குற்றச்சாட்டு கூறிய இந்த பெண்ணும் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வரவழைத்து தான் நானும் என் மகனும் அவரிடம் பேசினோம். படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் இதில் நடித்த சீனிவாசனுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போனதால், இந்தப்பெண் சம்பந்தப்பட்ட காட்சியை மறுநாள் மாற்றினோம். ஆனால் மறுநாள் லைட்டிங் பிரச்சனையால் சற்றே தாமதமாக இந்தப்பெண் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்..
எனது மகனும் (இயக்குனர் ஜூனியர் லால்) பதிலுக்கு கோபத்தில் கத்திவிட்டு, உன் நடிப்பு சரியில்லை நீ கிளம்பு என கூறிவிட்டார். அது கூட உதவி இயக்குனர்களின் கருத்தை தான் அவர் சொன்னார். ஏற்கனவே 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியிருந்த நிலையில் அந்தபெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயாக கொடுத்தோம். அதன்பின் சில நாட்கள் கழித்து பத்து லட்சம் ரூபாய் நஷ்ட வேண்டும், டிவியில் மன்னிப்பும் கேட்க வேண்டும் என அந்தப்பெண் நோட்டீஸ் அனுப்பினார்..
நாங்கள் அதை கண்டுகொள்ளவில்லை... படமும் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீசாகிவிட்டது.. எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அப்போதே அந்தப் பெண் தனது தரப்பு நியாயத்தில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். அப்போது அமைதியாகவிட்டு இப்போது மீண்டும் இந்தப்பிரச்சனையை கிளறுவது ஆதாயம் தேடும் நோக்கில் தான். எனது சினிமா அனுபவத்தில் இவர்கள் போன்ற சில பெண்கள் கொடுக்கும் சிக்கல்களை சமாளித்து கடந்து தான் வந்துள்ளோம், இது ஒன்றும் புதிதல்ல” என விளக்கமாக கூறியுள்ளார் நடிகர் லால்.