சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீப நாட்களாக தெலுங்கு திரையுலகை சுற்றி சுழன்றடித்து வருகிறது பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்.. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.. குறிப்பாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் போதைப்பொருள் பயன்படுத்துபவர் தான் என சிலர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.. தவிர அவரது பாங்காங் ட்ரிப் மீதும் சந்தேக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனம் திறந்துள்ளார் பூரி ஜெகன்நாத்.. அதில் போதைப்பொருட்களை உட்கொண்டால் நான் எப்படி என்னுடைய ஸ்க்ரிப்ட்டுகளை அவ்வளவு சீக்கிரம் எழுதி விட முடியும் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.. மேலும் தனது பாங்காங் ட்ரிப்புகளை பற்றி குறிப்பிட்ட பூரி ஜெகன்நாத், “நான் என்னவோ பாங்காங்கிற்கு செல்வதே செக்ஸுக்கும், மசாஜூக்கும் தான் என்பது போல சொல்லப்படுகிறது.. உண்மையில் அங்கே செல்வது கதை எழுதுவதற்குத்தான்.
அதுமட்டுமல்ல அடிக்கடி மசாஜ் செய்துகொள்வதற்கு அது ஒன்றும் சுகமான விஷயம் அல்ல., ரொம்பவும் வலி நிறைந்த மிக கஷ்டமான ஒன்று.. அப்படியும் நான் மசாஜ் செய்வது என மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தெரியுமே.. 56 வயதான பொன்சி என்கிற பெண்மணிதான் எனக்கு மசாஜ் செய்வார். இளம்பெண்களை நான் மசாஜ் செய்வதற்கு அனுப்பதில்லை” என்கிறார் பூரி ஜெகன்நாத்.