சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள நடிகர் திலீப், நடிகையை ஆள்வைத்து கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பிடம் நேற்று மாலைவரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது.. அதன்பின் நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவலுக்கான அனுமதி நேரம் முடிந்ததும் அவர் ஆலுவா சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவர் சிறைக்கு கொண்டுவரப்பட்டபோது நேரம் மாலை 5.35 மணி..
சிறையை பொறுத்தவரை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 'வீக் என்ட்' என்கிற முறையில் கைதிகளுக்கு மட்டன் உணவு வழங்கப்படும்.. இதற்காக நான்கு மணிக்கே கைதிகளுக்கான ரோல்கால் நடத்தப்பட்டு யார் யாருக்கு மட்டன் தேவை என கணக்கெடுத்து, அதற்கேற்ற அளவில் தான் சமைக்கப்படுமாம். நேற்று திலீப் தாமதமாக சிறைக்கு வந்ததால் அவருக்கு மட்டன் வழங்கப்படவில்லையாம்.. சாதாரண உணவே வழங்கப்பட்டதாம். அருகில் இருந்த சில கைதிகள் தங்களுடைய மட்டன் உணவை திலீப்பிற்கு தர முன்வந்தபோதும் திலீப் அதை மறுத்துவிட்டாராம்.