சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவன் ஜெயிலில் இருந்துகொண்டே திலீப்புக்கு எழுதியதாக சொல்லப்பட்ட ஒரு கடிதம் தான். அந்த கடிதத்தில் பாவனா விவகாரம் பற்றி உண்மையை வெளியே சொல்ல மாட்டேன் என்றும் அதற்காக திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டுவது போலவும் அதில் குறிப்பிட்டிருந்தானாம்.
இதை அடிப்படையாக வைத்து தான் தற்போது போலீசார், இந்த வழக்கில் திலீப், அவரது நண்பர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணையும் நடத்தினர்.. ஆனால் பல்சர் சுனில் எழுதிய இந்த கடிதமே ஜெயிலில் உள்ள அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தான் எழுதப்பட்டது என பல்சர் சுனிலின் ஜெயில்மெட்டான விபின்லால் என்கிற கைதி புதிய தகவலை வெளியிட்டுள்ளானாம். அந்த கடித்தத்தை சுனிலுக்காக எழுதியது தான் தான் என்றும், ஜெயில் அதிகாரிகள் மற்றும் பல்சர் சுனில் ஆகியோர் கட்டாயப்படுத்தி தன்னை அப்படி எழுதவைத்ததாகவும் அவன் கூறியுள்ளானாம்.. மேலும் இந்த விஷயத்தில் சதி நடந்திருப்பது உண்மை தான் என்றும், ஆனால் அதில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவன் கூறியுள்ளானாம். இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.