சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் காற்று வெளியிடை படத்தில் இவரது காட்சிகள் கத்தரிக்கு பலியானாதாலும் படம் தோல்வி அடைந்ததாலும் எந்த பயனும் இல்லை. தற்போது அவர் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துவிட்டார். அடுத்து விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்து வருகிறார். அடிப்படையில் நாடக நடிகையான ஸ்ரத்தா இப்போது நாடகத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:
நான் கட்டுப்பாடான ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவள். ராணுவத்தில் நான் டாக்டராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் குடும்பத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால் எனக்கு நடிப்பின் மீதுதான் கவனம் இருந்தது. இதனால் நடிப்பு பயிற்சி பெற்று ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தேன். அந்த நாடகத்தை பார்த்துதான் மலையாள பட வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே யூடேர்ன் வாய்ப்பு வந்தது இப்போது தமிழுக்கும் வந்துவிட்டேன்.
நாடகம்தான் என் வாழ்க்கை என்றிருந்தேன். சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்து விட்டது. அதிலும் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் மாதிரியா ஹீரோக்களுடன் நடிப்பேன் என்பதை கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இப்போது நாடகத்தில் நடிக்க ஆசை இருந்தாலும் நேரம் இல்லை. எனது நாடக நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். நாடகத்தில் பெற்ற பயிற்சிதான் சினிமாவுக்கு உதவுகிறது என்பதை எப்போதும் மறக்க மாட்டேன் என்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.