சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் 'ராராண்டோய் வெடுக்க சூடம்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ராகுல் பிரீத் சிங்.. இந்தப்படத்தில் தனது கேரக்டர் பற்றி கூறியுள்ள ராகுல் பிரீத் சிங், “மற்ற படங்களைப்போல வெறும் கதாநாயகியாக வந்தோம், போனோம் என்றில்லாமல் நாயகன் நாகசைதன்யாவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது” என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.. தற்போது இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ள நிலையில் தனது கேரக்டர் குறித்து விரிவாக பேசியுள்ள ராகுல் பிரீத் இந்தப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவை எச்சரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தப்படத்தில் ராகுலின் கதாபாத்திரத்தின் பெயர் பிரம்மரம்பா.. இதுநாள் வரை தான் நடித்த படங்களில் தனது கேரக்டர்களின் பெயர்கள் ஒன்றிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன என கூறிய ராகுல் பிரீத் சிங், இந்தப்படத்தின் கேரக்டர் எனக்கு என்றென்றும் மறக்காமல் நினைவுடன் இருக்கும். வெறும் பெயருக்காக மட்டுமல்ல, இத்தனை நாட்களில் நான் நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு கேரக்டர் எனக்கு கிடைக்கவே இல்லை” என கூறியுள்ளார். அப்படி ஒரு கேரக்டரை எனக்கு கொடுத்த இயக்குனர் கல்யான் கிருஷ்ணாவிடம் “உங்களது அடுத்த படத்திலும் நான் தான் கதாநாயகியாக நடிப்பேன்.. வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளேன்” என கூறியுள்ளார் ராகுல் பிரீத் சிங்.