சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விளையாட்டு பின்னணியில் சரியானபடி கதை சொன்னால் படம் சக்சஸ் என்பதற்கு பல முன் உதாரணங்கள் மலையாள சினிமாவில் உண்டு. அந்தவகையில் கேரளாவின் மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் தான் 'கேப்டன்.. இதில் கேப்டன் ஆக நடிக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இந்தப்படத்தின் இயக்குனர் பிரஜேஷ் சென் இந்த கதையை எழுதும்போதே 'சத்யன்' கதாபாத்திரமாக மனதில் வந்து உட்கார்ந்து கொண்டவர் நடிகர் ஜெயசூர்யாதானாம்.
இதுவரை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதானாம். கடந்த சில நாட்களாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை கோழிக்கோடு யுனிவர்சிட்டியில் படமாக்கி வந்தார்கள். அங்கே உள்ள விளையாட்டு அரங்கில் கால்பந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது எதிர்பாராதவிதமாக ஜெயசூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவரை பரிசோத்தித்த டாக்டர்கள், அவர் ஒரு வாரம் ஒய்வு எடுக்க வேண்டும் என கூறிவிட்டதால், தற்போது தற்காலிகமாக 'கேப்டன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.