சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. பாகுபலி 2 க்கு ரசிகர்கள் இடையே கிடைத்துள்ள வரவேற்பால் நடிகர் ராணா டங்குபதி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகுபலி என்னை சினிமா வாழ்க்கையையே மாற்றிய படம். பாகுபலி 2 ம் பாகத்தால் நிச்சயமாக எனது மார்க்கெட் வால்யு உயர்ந்துள்ளது. இப்போது ஏராளமான பட வாய்ப்புக்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளேன்.
வேறு வேறு மொழிகளில் மாறுபட்ட கதைகளை கேட்டு வருகிறேன். பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு முன் இது போன்ற பட வாய்ப்புக்கள் கிடைப்பது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ரசிகர்களுக்கும் இப்போது என் மீது நம்பிக்கை வந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான பட நிறுவனங்களும், இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.