சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த வாரம் மலையாளத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்த புத்தன் பணம் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இனியா நடித்துள்ளார்.. மம்முட்டிக்கு ஜோடியாக மனைவி கேரக்டரில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டரில் வேறு சிறிய நடிகை நடித்திருந்தார். இன்னும் சில காட்சிகளில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஷீலு ஆப்ரஹாம் என்பவர் நடித்திருந்தாலும், இவர்களை தாண்டி பிரதான ஹீரோயினாக இனியாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தப்படத்தில் கோழிக்கோட்டில் வசிக்கும் சுந்தரி என்கிற தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்திருந்தார் இனியா.. இந்தப்படத்தில் மம்முட்டியுடன் கூடவே வரும் கதாபாத்திரமான மம்முக்கோயா என்கிற காமெடி நடிகர் இனியா பற்றி ஒருவரிடம் விசாரிப்பார்.. அதற்கு அந்த நபர்.. “ஓ..அவளை கேட்கிறீர்களா.. அவள் தான் சுந்தரி.. தமிழத்தி..” என்பார்.. அதற்கு மம்முக்கோயா.. பார்த்தா சுந்தரி (அழகி) மாதிரி தெரியலையே.. ரொம்ப ஆவரேஜா தானே இருக்கா” என்று சொல்லி சிரிப்பார்.. இது இனியாவை மட்டம் தட்டுவதற்காக வைக்கப்பட்ட வசனமா இல்லை இனியா தமிழ்ப்பெண்ணாக நடித்ததால் அவரை கிண்டலடிப்பதற்காக வைக்கப்பட்ட வசனமா என்பதற்கு இயக்குனர் ரஞ்சித் தான் விளக்கம் சொல்லவேண்டும்..
ஆனால் அதேசமயம் இனியாவின் மகனாக வரும் எட்டாம் கிளாஸ் படிக்கும் பரதனை தனுஷின் தீவிர ரசிகனாக காட்டியிருப்பதிலும், படத்தில் 'மாரி' படத்தின் பாடலையும் பின்னணி இசையையும் ஆங்காங்கே உள்ளே நுழைத்திருப்பதிலும் தமிழ்ப்பெருமையும் பாடியுள்ளார் ரஞ்சித்.