பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. தமிழில் அவர் இயக்கி வெளிவரும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' படம் கூட நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், நேற்று தமிழில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தெலுங்கில் 'செலியா' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கான விமர்சனங்களும் வரவேற்பும் குறைவாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படங்கள் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று தெரிவிக்கிறார்கள். தமிழில் வரவேற்பைப் பெற்ற பாடல்கள், தெலுங்கில் வரவேற்பை பெறாததும் படத்தின் மோசனமாக வரவேற்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன.
தமிழில் விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் இங்கு படம் தப்பித்துவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம். அதே சமயம், தெலுங்கில் இப்படம் மோசமான தோல்வியைத் தழுவும் என்கிறார்கள்.
கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தாலும், அவரை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை என்பது படத்திற்கு மைனஸ் பாயின்டாக் அமைந்துவிட்டது.