சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நீண்ட நாட்களெல்லாம் ஆகவில்லை மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் அணிந்து கடந்த வருடம் தானே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியானது. கூடவே அவருக்கு 'கசப்பான' அனுபவங்களையும் தந்துவிட்டது. ஆம், அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர் கேரளாவில் மாதர்சங்க அமைப்புகள் மம்முட்டிக்கு எதிராக கொடி பிடித்து கோஷம் போடும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது.
மக்களிடம் தனது போலீஸ் கேரக்டர் குறித்த பாசிடிவான எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என மம்முட்டி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகி ப்ரெஷ்ஷான போலீஸ் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷாம்தத்.. ஆம்.. 100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது இயக்குனராக மாறியிருக்கும் அதே ஷாம்தத் தான்.. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரி வேடமாம். அதிரடியான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்..