சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இன்றைய தேதியில் தமிழ்சினிமா இயக்குனர்களின் மோஸ்ட் வான்டட் எழுத்தாளர்களில் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் தான்.. ஷங்கர், மணிரத்னம் உட்பட ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது படத்தின் கதை உருவாக்கத்தில், வசனத்தில் ஜெயமோகனின் பங்கு இருக்கவேண்டும் என்பதை அதிகம் விரும்புகின்றனர்.. தற்போது ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள '2.O' படத்திலும் ஜெயமோகனின் பங்கு கணிசமாக உள்ளது.. தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஜெயமோகனுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறார்கள் சில இயக்குனர்கள்..
அந்த வகையில் விருதுகள் பல பெற்ற 'ஒளிமுறி' படத்திற்கு கதை எழுதிய ஜெயமோகன், தொடர்ந்து 'காஞ்சி', ஒன் பை டூ' உட்பட சில படங்களில் கதை எழுதினார்.. தற்போது 'என்னு நிண்டே மொய்தீன்' வெற்றிக்கூட்டணியான ஆர்.எஸ்.விமல்-பிருத்விராஜ் இருவரும் மீண்டும் இணையும் வரலாற்றுப்படமான 'கர்ணன்' படத்தில் ஜெயமோகன் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.. இவையெல்லாவற்றையும் விட ஜெயமோகனுக்கு உள்ள இன்னொரு ஆசை என்னவென்றால், சி.வி.ராமன் பிள்ளை எழுதிய தர்மராஜா என்கிற நூலை அருமையான திரைக்கதையாக்கி வைத்திருக்கிறாராம்.. இந்த கதையில் மம்முட்டி நடிக்கவேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம். மம்முட்டி ஒகே சொல்லிவிட்டால் இது திரைப்படமாவதற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம் ஜெயமோகன்.