வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் கோலிவுட் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கதையாசிரியர் வம்சி இயக்குனராக அறிமுகமாகும் நா பேரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அல்லு அர்ஜூன் கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே சிரஞ்சீவியும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரேஸ் குர்ராம் படப்புகழ் வம்சி இயக்கத்தில் தேசபக்தி படமாக நா பேரு சூர்யா திரைப்படம் உருவாகவுள்ளது. வம்சி முதலில் இக்கதையை ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறினார். அவர் மறுப்பு தெரிவிக்கவே அல்லு அர்ஜூன் இப்படத்தில் நடிக்கின்றார். சிரஞ்சீவியின் சகோதரரும் தயாரிப்பாளருமான நாகபாபு இப்படத்தை தயாரிக்கின்றார்.