பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
முன்னணி நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெற்றி பெற்றால் அப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கோலிவுட்டிலும் தற்போது தலைதூக்கியுள்ள இந்த சம்பர்தாயம் தெலுங்கு திரை உலகிற்கு பழக்கப்பட்ட ஒன்று. மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என பலரும் தங்கள் வெற்றிப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ராம் சரணும் இணைந்துள்ளார். தனது தந்தை சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக ராம் சரண் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தமிழில் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் தமிழைக்காட்டிலும் தெலுங்கில் நல்ல வசூல் செய்தது. இயக்குனர் விவி விநாயக் இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளராக தனது முதல் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய இயக்குனர் விவி விநாயகிற்கு ராம் சரண் விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றாராம். 50 நாட்களைக் கடந்து ரூ 104 கோடி வசூலை ஈட்டி ஒடிக்கொண்டிருக்கும் கைதி நம்பர் 150 படக்குழுவுடன் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ள ராம் சரண் இதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றார். அந்த நிகழ்ச்சியில் ராம் சரண் காரை இயக்குனர் விவி விநாயக்கிற்கு பரிசளிக்க ராம் சரண் முடிவு செய்துள்ளார்.