சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவர் மரணம் இயற்கையானது அல்ல என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அதிகம். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவருகிறார் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணன். ஒருகட்டத்தில் போலீஸார் கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், மீறி அவர்களை வற்புறுத்தினால் தங்களையே மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்தவும் செய்தார்..
இன்னும் குற்றவாளிகளை நெருங்காத நிலையில் போலீசார் இந்த வழக்கை கைவிடப்போவதாக அறிந்த ராமகிருஷ்ணன், வழக்கை தீவிரப்படுத்தும் முயற்சியாக தற்போது குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என்பதுதான் அவரது இந்த போராட்டத்தின் நோக்கம். கலாபவன் மணிக்காக அவரது நண்பரான டாவின்சி சுரேஷ் என்பவர் செய்துள்ள அவரது உருவச்சிலை முன்பாக அமர்ந்து, மூன்றாவது நாளாக இந்த உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்.. இந்த உண்ணாவிரதத்தில் கலாபவன் மணியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டாலும் மணியின் மனைவி இதில் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது..