குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தெலுங்கில் தயாராகி உள்ள படம் சரணம் கச்சாமி. நவீன் சஞ்சய், தனிக்ஷ் திவாரி நடித்துள்ளனர். பொம்மகு முரளி தயாரித்துள்ளார். பிரேம் ராஜ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த மாதம் தணிக்கை சான்றுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் தராமல் இழுத்தடித்துள்ளனர். படம் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி சான்றிதழ் தர தணிக்கை குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 6 பேர் ஐதராபாத்தில் உள்ள தணிக்கை குழு அலுவலத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு திரும்பினார். இது குறித்து தணிக்கை அலுவலக மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.