அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவர்கள், ஏன் சிறு குழந்தைகள் கூட, படத்தில் இடம்பெறும் புலியை வேட்டையாடும் அவரது பிரத்யேக ஸ்டைல் ஒன்றை அடிக்கடி செய்துகாட்டும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவை நிறைத்து வருகின்றன..
அப்படித்தான் ஆழப்புழாவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோகன்லால் வேல் எறிந்து புலியை கொள்வது போல 'புலி முருகன்' பாணியில் கையில் இருந்த இரும்புக்கம்பியை புலியை நோக்கி வீசுவதுபோல வீசியுள்ளான்.. ஆனால் அவன் வைத்த குறி, அந்த இரும்புக்கம்பி அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரோஷன் மேரி என்கிற 9 வயது சிறுமியின் கண்களை தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.