சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கான உதயமானது. தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் இருக்கிறது. ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய சூழ்நிலை. ஆந்திராவின் புராதன நகரான பிரபவாதி சாயலில், பழைமையும், புதுமையும் கொண்ட நகரமாக புதிய தலைநகரை உருவாக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுடன் சந்திரபாபு நாயுடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
புதுமையான விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பழமையான விஷயங்களை நீங்கள் முடிவு செய்து சொல்லுங்கள் அதை நாங்கள் செய்து தருகிறோம் என்று அந்த நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து ஆந்திராவின் புதிய தலைநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த குழுவில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தமிழில் வானம் படத்தை இயக்கியவரும் சமீபத்தில் வெளியான கவுதமிபுத்ரா சதாகர்ணியை இயக்கியவருமான கிரிஷ். படத்தின் கலை இயக்குனர் ஆனந்த்சாய் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒரு தலைநகர் உருவாக்கத்தில் திரைக் கலைஞர்களை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.