வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
நீண்ட நாட்களுக்கு பிறகு 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் நடிப்பதற்காக மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹாரர் த்ரில்லரை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இனியா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பிரகாஷ்ராஜும் ஜெயராமும் சரோஜா, பரமசிவம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
பிரகாஷ்ராஜை போலவே முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் சித்திக். பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு தீவிர ரசிகரான சித்திக்கிற்கு அவருடன் நடிப்பதில் அளவுகடந்த சந்தோசம்.. ஆனால் இருவரும் சேர்ந்து நடித்த ஒரு காட்சியில் சித்திக்கின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டாராம் பிரகாஷ்ராஜ். அதுமட்டுமல்ல, அந்தக்காட்சி முடிந்தபிறகு படக்குழுவினருடன் சேர்ந்து கைதட்டி தனது பாராட்டை தெரிவித்த பிரகாஷ்ராஜ், சித்திக்கின் பல படங்களில் அவரது மாறுபட்ட நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும் கூறினாராம்