குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
திருவனந்தபுரம்:பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள, தங்கல் திரைப்படத்தின் வெற்றி, மலையாள திரைத் துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.
மல்யுத்தத்தை மையமாக வைத்து, பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம், தங்கல். இந்த படம், கேரளாவில் மட்டும், 60 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. கேரளாவில், முதல் மூன்று நாட்களில், ஒரு கோடி ரூபாய் வசூலாகி, சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிருத்விராஜ் மற்றும் முக்கிய நடிகர்களின் நான்கு படங்கள், கிறிஸ்துமஸ் நாளான நேற்று, திரைக்கு வரத் தயாராக இருந்தன.ஆனால், தங்கல் படத்துக்கு வசூல் நன்றாக இருப்பதால், மலையாள படங்களை திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர்.
தங்கல் படத்துக்கு தான், இப்போது ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது; அந்த படத்தை துாக்கி விட்டு, மலையாள படங்களை திரையிட வேண்டுமெனில், எங்களுக்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடையே முத்தரப்பு பேச்சு நடந்தது. எனினும் இதில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால், கிறிஸ்துமஸ் நாளான நேற்று, எந்தவித மலையாளப் படமும் திரையிடப்படவில்லை.