சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள சினிமாவின் இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான்.. பிரபல நடிகர் மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதெல்லாம் நமக்கு தெரியும். ஆனால் மகனை சினிமாவில் நடிக்க அனுப்புவதற்கு முன் அவருக்கு ஒரு கால்கட்டு போட தீர்மானித்து அமல்சுபியா என்கிற பெண்ணை கடந்த டிச-22, 2011 அன்று துல்கருக்கு திருமணம் செய்து வைத்தார் மம்முட்டி. அதன்பிறகுதான் துல்கர் சினிமாவில் நுழைந்ததும் இத்தனை உயரத்தை அடைந்ததும் நடந்தது.. அதனால் தனது மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் துல்கர் சல்மான்.
இன்று இவர்களது ஐந்தாவது திருமண நாள்.. ஆனால் இதனை ஒன்றாக இருந்து சந்தோசமாக கொண்டாட முடியாதபடி அமெரிக்காவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் துல்கர் சல்மான். இருந்தாலும் தனது மனைவிக்கு பேஸ்புக் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ள துல்கர், குறும்புடன், “என்னைப்போன்ற ஒரு கார்ட்டூனை எப்படி திருமணம் செய்துகொண்டாய் என்றுதான் எனக்கு தெரியவில்லை.. ஆனால் நன்றி பேபி.. இன்று நம் திருமண நாள்.. இந்த ஐந்து வருடங்களும் ஐந்து நிமிடங்களாக ஓடிவிட்டது.. இந்த வருடம் என்னால் வீட்டில் இருக்கமுடியாமல் போனது வருத்தம் தான். ஆனால் நான் வீட்டிற்கு வந்ததும் இதை சிறப்பாக கொண்டாடுவோம்” என ஒரு கடிதம் போல மனைவிக்கு எழுதியுள்ளார்.
இந்தப்பதிவை இப்போதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் வரை லைக் பண்ணியுள்ளார்கள்.