சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல மலையாள இயக்குனர் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இந்தி, மலையாளம் என இருமொழிப்படமாக உருவாவதாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்..
இப்போதைய சூழலில் கமலா சுரையாவாக நடிக்க வித்யா பாலனை விட்டால் வேறு ஆள் இல்லைதான்.. ஆனாலும் இந்தக்கதையை உருவாக்கும்போதே இயக்குனர் கமலின் மனதில் இந்த கதாபாத்திரமாக வந்து அவ்வப்போது நிழலாடிய முகம் யார் தெரியுமா..? மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தான்.. அவரை மனதில் வைத்து தான் இந்தக்கதையை உருவாக்க ஆரம்பித்தாராம் இயக்குனர் கமல்.. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரை காலன் கொண்டுபோய்விட, இப்போது இந்த அரிய வாய்ப்பு வித்யாபாலனுக்கு கிடைத்துள்ளது.