சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல மலையாள நடிகர் லால்... ம்ஹூம்.. நமக்கு எப்பவும் அவர் சண்டக்கோழி வில்லன் தான். இந்த வருட ஆரம்பத்தில் திலீப்பை வைத்து 'கிங் லையர்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவருக்கு, அதன்பின் 'புலி முருகன்' பட ஷூட்டிங்கே கதி என மற்ற படங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்தார். அவரும் மோகன்லாலும் நீண்ட நாட்கள் கழித்து இணைந்து நடிக்கும் படம். அதிலும் மோகன்லாலின் நண்பனாக படம் முழுவதும் வரும் வேடம் என்பதால் தனது முழு அர்ப்பணிப்பையும் இந்தப்படத்திற்காக கொடுத்தார்.
இப்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதுடன், லாலின் நடிப்பையும் ரசிகர்கள் ஆகா ஓஹோவென பாராட்டுவதால் மனிதர் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு காட்டில் நடந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்து லாலை மிரள வைத்ததாம். அதாவது கதைப்படி தன்னை தேடிவரும் (அன்பு) பாலாவையும் அவரது நண்பரையும் காட்டில் வரவேற்கும்போது ஒரு கையில் பாம்பை பிடித்தபடி லால் என்ட்ரி கொடுக்க வேண்டும். இதற்காக இரண்டு பாம்புகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டனவாம். பாம்புடன் நடிப்பதா என லால் பயப்பட, பாம்புக்கு வேண்டுமானால் டூப் போடலாமா என அவரிடம் கேட்டார்களாம். அவரோ, பாம்பு ஒரிஜினலாக இருக்கட்டும், எனக்கு வேண்டுமானால் டூப் போடுங்கள் என சமாளித்து எஸ்கேப் ஆக பார்த்தாராம்.
ஆனால் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, இந்த காட்சியை படமாக்கும் முன், இரண்டில் ஒரு பாம்பு எப்படியோ நழுவி ஒரு பாறையின் இடுக்கில் சென்று புகுந்துகொண்டது. அதை வெளிக்கொண்டுவர தாமதமானதால் இன்னொரு பாம்பை லாலிடம் கொடுத்துவிட்டனர்.. அவருக்கு பாம்பை பிடித்தபடி ஒரே ஷாட்டில் வசனம் பேசி நடிப்பது பயமாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் பாலாவுக்கும் அவரது நண்பராக நடித்தவருக்கும் அந்த காட்சியில் நடிப்பது திக் திக் என்று இருந்ததாம். காரணம் இன்னொரு பாம்பு புகுந்துகொண்ட பாறை மேல் நின்றுகொண்டு தான் நடிக்க வேண்டும். கீழே இருக்கும் பாம்பு எந்த நேரம் மேலே வரும் என தெரியாமல், அதேசமயம் பயத்தையும் வெளிக்காட்டாமல் ஒரு வழியாக கஷ்டப்பட்டு நடித்து முடித்தார்களாம்.