100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் இருந்தவருக்கு 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் வாய்ப்பு வந்து கடைசியில் ஏனோ தட்டிப்போனது..
இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் தேடி வந்திருக்கிறது. படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டும் இருக்கிறார் ராகினி. படத்தின் பெயர் 'ஹதியா'.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 'பெருச்சாளி' மலையாளப்படம் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் நடந்தது.. அதனால் கேரளாவின் அழகை தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தவருக்கு இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கேரளாவில் நடைபெறுவதால் அந்த மனக்குறை நீங்கியுள்ளது.. கேரளா இவ்வளவு அழகா என வியந்து போயிருக்கிறார் ராகினி.