சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
துல்கர் சல்மான் தமிழில் நடித்தது வெறும் இரண்டு படங்கள் தான்... அதில் அவரை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' படம். ஆனால், அதற்கு முன்னரே குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் 'வாயை மூடி பேசவும்' படம் அவரை பிரபலப்படுத்திவிட்டது... அதுதான் சில தினங்களாக திருப்பூரில் நடைபெற்று வரும் அவரது மலையாள படப்பிடிப்பில் அவரைக்காண பள்ளிக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வரவைத்தும் விட்டது.
துல்கர் சல்மான் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. கேரளா மற்றும் தமிழகம் என இரண்டு பகுதிகளிலும் நடக்கும் கதை என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. மாலை நேரத்தில் படப்பிடிப்பில் இருந்த தன்னைக்காண கூடியிருந்த கூட்டத்தை, குறிப்பாக பள்ளிச்சீருடையுடன் குழுமியிருந்த மாணவர்களை கண்டு சந்தோஷத்தில் திகைத்து போய்விட்டாராம் துல்கர் சல்மான். இந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.