குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தமிழ் சினிமாவில் உள்ளதை போல, ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு ரிலீஸ் தினத்தன்று அதிகாலை 2 மணிக்கே ஸ்பெஷல் போடுவது போன்ற வழக்கம் எல்லாம் இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லை.. இத்தனைக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தீவிரமானவர்கள் தான் என்றாலும் கூட, இன்னும் விடியற்காலையிலேயே சிறப்பு காட்சி பார்க்கும் மனநிலைக்கு ரசிகர்களும் வரவில்லை, அதற்கு தியேட்டர் நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்ததும் இல்லை. ஆனால் மோகன்லால் நடிப்பில், வரும் அக்-7ஆம் தேதி வெளியாக இருக்கும் 'புலி முருகன்' படத்திற்காக இந்த மரபுகளை உடைத்தெறிந்துள்ளனர் ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும்..
கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களுக்கு மேல் வெளியாக உள்ள புலி முருகன் படத்திற்கு காலையில் சிறப்புக்காட்சி வேண்டுமென்று ரசிகர்கள் அடம்பிடித்து தற்போது, கிட்டத்தட்ட 130 தியேட்டர்களுக்கு மேல் அதற்கான அனுமதியும் வாங்கிவிட்டார்களாம். அத்தனை சிறப்பு காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி விட்டனவாம். அதுமட்டுமல்ல, முதல் நாள் மற்ற காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் பல தியேட்டர்களில் விற்றுத்தீர்ந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.. இதன்மூலம், மலையாள திரையுலகில் 'புலி முருகன்' ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.