சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரதாப் போத்தன் நல்ல நடிகர். ஒரு காலத்தில் நல்ல இயக்குனரும் கூட. ஆனால் அவரது வாய் துடுக்குதான் அவருக்கு பலவகையிலும் தேவையில்லாத சிக்கலை இழுத்துக்கொண்டு வந்து விடுகிறது. கடந்த வருடம் முழுவதும் ஜெயராமுடன் சண்டையிட்டுக்கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். காரணம் அவரது மகன் காளிதாசை தான் அறிமுகப்படுத்துவதற்கு முதலில் சம்மதம் சொன்ன ஜெயராம், அதன்பின் அதை கண்டுகொள்ளாமல் விட்டது தான். அந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார்.
அந்தப்படத்தின் கதையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனரான அஞ்சலி மேனன் எழுதுவார் என்றும் அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப்படம் ட்ராப் ஆனது. பிரதாப் போத்தனோ, அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை ரொம்பவே சுமாராக இருந்தது என குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு அஞ்சலி மேனன் அப்போது பெரிய பதிலடி ஒன்றும் தரவில்லை. ஆனால் இப்போது அதே படத்தை அஞ்சலி மேனன் தானே துல்கர் சல்மானை வைத்து இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே தனக்கு 'உஸ்தாத் ஹோட்டல்' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் வெற்றிகளை தந்தவர் அஞ்சலி மேனன் என்பதால் இதற்கு துல்கர் சல்மானும் ஓக்கே சொல்லிவிட்டாராம்.. இதை கேள்விப்பட்ட பிரதாப் போத்தன் 'அடடா வட போச்சே' என வடிவேலு பாணியில் அப்செட் ஆகியுள்ளாராம்.