சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மண்பானையில் வைக்கப்பட்ட மீன் குழம்பையும் இன்னும் பிரசுரம் ஆகாத ஒரு பக்க கதையையும் நம்பி உட்கார்ந்துகொண்டிருந்தால், காலம்தான் கடந்துகொண்டே போகும் என்பதை உணர்ந்த, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பேசாமல் மலையாளத்தில் தனது முதல் படத்தை தொடங்கி விடலாம் என முடிவுக்கு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டார். இந்த முடிவை தனது தந்தையிடம் சொல்ல அவரும், சரி என ஒப்புதல் அளித்ததோடு, மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுகம் வலுவானதாக இருக்கவேண்டும் என்கிற முடிவையும் எடுத்தார்.
அதனால் தான் நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டு முறை நூறு நாள் படங்களாக கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைனை தனது மகன் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டு, விடாப்பிடியாக நின்று ஒப்பந்தமும் செய்துவிட்டார்.. இப்போது இந்தப்பத்திற்கு 'பூமரம்' என பெயர் வைத்துள்ளார்கள். கல்லூரி கேம்பஸை மையமாக வைத்து, சில ஆய்வுப்பணிகள் செய்து இந்தக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் அப்ரிட் ஷைன்.