சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொதுவாக மலையாள சினிமாக்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓடுவது என்பது அரிதாகவே நடக்கிற விஷயம்.. ஏதோ அத்திப்பூத்தாற்போல ஒன்றிரண்டு படங்கள், அதுவும் ஏதாவது தெலுங்கு நடிகர்கள் அந்தப்படத்தில் இருந்தால் மட்டுமே டப்பிங் செய்யப்படும் வாய்ப்பை பெறும். ஆனால் மணிரத்னம் இயக்கிய தமிழ்ப்படமான 'ஒ காதல் கண்மணி' தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸானதன் மூலமாக மலையாள நடிகரான துல்கருக்கு தெலுங்கில் கால் பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம்.. அந்தப்படத்தால் அவருக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இதனை பயன்படுத்தி துல்கர் சல்மான் நடித்து அதே வருடம் மார்ச்சில் மலையாளத்தில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தார்கள்.. துல்கரை வைத்து மட்டுமே தெலுங்கில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடமுடியுமா..? ஒகே கண்மணியை போல இந்தப்படத்தின் கதாநாயகியும் தெலுங்கில் பாப்புலரான நித்யா மேனன் என்பதால் தான் டப்பிங் ரிலீசில் ஆர்வம் காட்டினார்கள்.. ஆனால் சில பல காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்து, ஒரு வழியாக இன்று ஆந்திராவில் ரிலீசாகியும் விட்டது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மானும் நித்யா மேனனும் கலந்துகொண்டனர்.