அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக கொண்டு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகி விடுகின்றன. அறிமுக இயக்குனர்களும், இரண்டாம் நிலை இயக்குனர்களும் மட்டுமே கவனம் செலுத்திவந்த இந்த கான்செப்ட்டில் முன்னணி நடிகர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் மம்முட்டியை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள புதிய படம் கேரள நகரம் ஒன்றில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தானாம்.
இந்தப்படத்தில் மம்முட்டி சராசரி நகரத்து மனிதனாக நடிக்கிறாராம். அப்படி ஒரே நாளில் நிகழும் பிரச்சனைகள் மம்முட்டியை எப்படி திசைமாற்ற முயற்சிக்கின்றன என்பதும் அதிலிருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார் என்பதும் தான் கதையாம். இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே ஜீத்துவிடம் உடனே படப்பிடிப்பிற்கு நாள் குறிக்க சொல்லிவிட்டாராம் மம்முட்டி.. ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தை பிருத்விராஜுக்கும், 'த்ரிஷ்யம்' படத்தை மோகன்லாலுக்கும் விட்டுக்கொடுத்து இரண்டு ஹிட்டுகளை கைநழுவ விட்ட மம்முட்டி, இந்த முறை சுதாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.