சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடந்து முடிந்த கேரளா சட்டமன்ற இடைத்தேர்தலின்போது மோகன்லால் செய்தது சரியல்ல என்று ஒரு விஷயத்தில் அவரை எதிர்த்த தேசிய விருதுபெற்ற நகைச்சுவை நடிகர் சலீம்குமார், இப்போது வேறொரு விஷயத்தில் அவர் செய்தது சரிதான் என ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் பத்தனாபுரம் தொகுதியில் கணேஷ்குமார், ஜெகதீஷ் என இரு நடிகர்கள் வேறு வேறு கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட்டபோது, அதில் ஒருவரான கனேஷ்குமாருக்கு ஆதரவாக ஒருநாள் மேடைப்பிரச்சரம் செய்தார் மோகன்லால்.
ஆனால் இரண்டு நடிகர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதே முதலில் தவறு என்றும், அதில் ஒருவரை ஆதரித்து மோகன்லால் பிரச்சாரம் செய்தது அதைவிட தவறு என்றும் கூறிய சலீம்குமார், மோகன்லாலின் செயலை கண்டித்து நடிகர்சங்கத்தில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். ஆனால் அதே சலீம் குமார் தான், கடந்த திங்கள் கிழமையன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், அந்த விழாவை இடையில் நிறுத்தாமல் முழுவதுமாக நடத்தி முடித்ததற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
காரணம் அந்த விழா நடந்த சமயத்தில் தான் மலையாள சினிமாவின் முக்கிய கதாசிரியர்களில் ஒருவரான டி.ஏ.ரஷாக் என்பவர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் துக்கத்தை அனுஷ்டிக்கும் வகையிலும் அந்த விழாவை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும் ஆனால் விழாவை நடத்தியதன் மூலம் மோகன்லால், கதாசிரியர் ரஷாக்கின் மரணத்தை பெரிதாக நினைக்கவில்லை என வினயன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்தனர்.